தமிழர் இனப்படுகொலை பிரேரணை ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேறியது!

இலங்கை இராணுவத்தினரால், ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என குற்றம்சாட்டி, கொண்டு வரப்பட்ட தனிநபர் பிரேரணை, கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர், விஜய் தணிகாசலம் இந்த தனிநபர் பிரேரணையைக் கொண்டு வந்திருந்தார். இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, ஒரு மேலதிக வாக்கினால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 59 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

2019 ஆம் ஆண்டு, சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு, கனடாவில் உள்ள இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!