கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் நேற்று புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதையடுத்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் எனவும் 7 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் கடற்படையினருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!