முகமாலை முன்னரங்க பகுதியில் மற்றொரு எலும்புக்கூடு மீட்பு!

கிளிநாெச்சி – முகமாலை முன்னரங்க பகுதியில் நேற்று 2ம் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது மேலும் ஒரு மனித எலும்பு கூடு மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 22ம் திகதி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளின்போது மனித எலும்பு கூடுகள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து கடந்த 26ம் திகதி அகழ்வு மேற்கொள்ளப்பட்டு அங்கிருந்து ஆயுதங்கள் மற்றும் பெண் போராளி ஒருவருடையதென சந்தேகிக்கப்படும் மனித எலும்பு கூடு மீட்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 2ம் கட்ட அகழ்வு பணி இடம்பெற்றது.

இதன்போது மேலும் ஒருவருடைய எலும்பு கூடு மற்றும் புலிகளின் சீருடை, ரவை கூடுகள், துப்பாக்கி ரவைகள் 34, மோட்டார் குண்டு, தகடு, குப்பி ஆகியன மீட்கப்பட்டுள்ளன. 3ம் கட்ட அகழ்வு பணிகள் 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!