சுரேஷ் – ஹரினுக்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்று!

இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உடைமைகள் மற்றும் நிதிப் பயன்பாடுகளில் முன்னாள் எம்பிக்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் ஈடுபடுவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (03) பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்து நீதிமன்று இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!