பிரித்தானியாவில் பயங்கரம்: கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தாய் – மகள்!

பிரித்தானியாவில் இளம்பெண் மற்றும் அவரது தாயார் இருவரும் கழுத்தறுபட்டு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்களின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர். வெசெக்ஸ் சாலை, சாலிஸ்பரி பகுதியில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் குடியிருப்பு ஒன்றில் இருந்து திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் சுதாரிக்கும் முன்னர் சம்பவயிடத்தில் இருந்து ஒருவர் மாயமாகியுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், அந்த குடியிருப்புக்குள் கழுத்தறுபட்ட நிலையில் உயிருக்கு போராடியபடி இருந்த இளம்பெண் மற்றும் அவரது தாயாரை மீட்டுள்ளனர். மருத்துவ உதவிக்குழுவினரால் முதலுதவி அளித்தும் இருவரையும் உயிருடன் மீட்க முடியமல் போயுள்ளது. மரணமடைந்த இளம்பெண் 18 வயதான Nikoleta Zdun எனவும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட அவரது தாயார் Aneta Zdun எனவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் மட்டுமின்றி, அந்த குடியிருப்பில் இருந்து பயத்தில் அலறிய சிறுமிகள் இருவரை, அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மரணமடைந்த இருவரின் கழுத்தும் அறுபட்ட நிலையில் காணப்பட்டதாகவும், குடியிருப்புக்கு உள்ளேயே இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை துவங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் உண்மை நிலவரம் வெளிவரும் என பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!