தேர்தலை எதிர்கொள்ளத் தயார்!

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்தும் திகதியையும், நாடாளுமன்ற கலைப்பையும் சவாலுக்குட்படுத்தி, சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை நேற்று தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகவும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!