நாட்டுக்குள் வரும் அனைவருக்கு பிசிஆர் சோதனை – ஜனாதிபதி பணிப்பு!

நாட்டுக்குள் வருபவர்களுக்கு கொரோனா (பிசிஆர்) பரிசோதனை நடத்துமாறும், பரிசோதனை அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

முன்னதாக இன்று (04) மதியம் அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஒருவர் பிசிஆர் சோதனைக்கு மறுத்த நிலையில், இராஜதந்திர சிறப்புரிமையின் அடிப்படையில் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே ஜனாதிபதியால் மேற்கண்ட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!