இன்றும் நாளையும் முழு நேர ஊரடங்கு!

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சகல அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!