சிறுவன் மீதான பொலிஸ் தாக்குதல்; தயாசிறி கண்டனம்!

களுத்துறை – தர்கா நகர் பகுதியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில பொலிஸ் அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் கொரோனா வைரஸ் ஒழிப்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ள அனைத்து பாதுகாப்பு துறையினரின் சேவையையும் கேள்விக்கு உட்டுத்தியுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஊரடங்கின் போது வீதியில் பயணித்தமைக்காக 14 வயது சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு நாம் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம். அத்தோடு பாதிக்கப்பட்ட குறித்த சிறுவனுக்கு நீதி வழங்கப்படும் என்று நம்புகின்றேன் – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!