ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் 10 வீதம் வீணாகி போயுள்ளது

பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவான நாடாளுமன்றம் இல்லாத காரணத்தினால், அவரது பதவிக்காலத்தின் 10 வீதம் வீணாகி போயுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளர்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ச 60 மாதங்களுக்காக ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலத்தில் 10 வீதம் தற்போது முடிந்து விட்டது.

நாட்டை கட்டியெழுப்பக் கூடிய யுக புருஷரை தலைவராக தெரிவு செய்தும், அவருக்கு வேலை செய்ய முடியும் பின்னணியை உருவாக்காமல் இருப்பது எந்தளவுக்கு அநீதியானது.

இது அதி கூடிய வெளிச்சத்தை தரும் மின் பந்தத்தை கையில் வைத்துக்கொண்டு அதற்கு மின் கலங்களை போடாது இருளில் இருப்பது போன்றது.

இதனால், ஜனாதிபதி பலமிக்கவராக மாறி, 69 லட்சம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக அவருக்கு உதவக் கூடிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய மக்களுக்கு இருக்கும் உரிமையை தொடர்ந்தும் தள்ளிப்போட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை தேர்தல் ஆணைக்குழுவிற்கு நினைவூட்ட விரும்புவதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!