பாடசாலை நேரங்களில் மாற்றம்!

பாடசாலைகளை நான்கு கட்டங்களாக மீள ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள, கல்வி அமைச்சு பாடசாலை நேரங்களிலும் மாற்றங்களை செய்திருப்பதாக கூறியுள்ளது.

இதன்படி, தரம் 3 மற்றும் தரம் 4 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, காலை 07:30 மணியில் இருந்து முற்பகல் 11:30 மணி வரையும் வகுப்புகள் நடைபெறும்.

தரம் 5 மாணவர்களுக்கு காலை 07:30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையும், தரம் 6, 7, 8 மற்றும் 9இல் கற்கும் மாணவர்களுக்கு, காலை 07:30 மணி தொடக்கம் பிற்பகல் 01:30 மணி வரையும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 10, 11, 12 மற்றும் 13 இல் கற்கும் மாணவர்களுக்கு, காலை 7:30 மணி தொடக்கம், மாலை 3:30 மணி வரையும் வகுப்புகள் நடைபெறும் என்றும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!