ஆர்ப்பாட்டங்களை கலைக்க பொலிஸ் பலத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்று வழிகளை பயன்படுத்த அரசு தீர்மானித்துள்ளது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
சுகாதார நடைமுறைகளின்படி ஆர்ப்பாட்டங்களை செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பச்சைக் கொடி காட்டவில்லை.
அண்மைய ஆர்ப்பாட்ட படங்களில் பொலிஸார் மீது முதல் தாக்குதலை ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளர்களே மேற்கொண்டனர் என்பது தெளிவாகிறது. அதற்கு எதிர்வினையாகவே பொலிஸார் பலத்த பிரயோகித்தனர்.
கூட்டத்தை கலைக்க பொலிஸ் பலத்தை பயன்படுத்த வேண்டாம், மாற்று வழிகளை பயன்படுத்தலாம் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.’ – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!