நேற்றும் 16 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுடைய மேலும் மூவர் நேற்று இரவு இனங்காணப்பட்டதை அடுத்து, நேற்று மட்டும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 1905 ஆக அதிகரித்துள்ளது.

16 பேரில் 6 பேர் மாலைத்தீவில் இருந்தும், 5 பேர் குவைட்டிலிருந்தும், இருவர் பங்களாதேஷ் மற்றும் லாகூரிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய மூவரும் கடற்படையைச் சேர்ந்தவர்களென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!