கொரோனாவுடன் சென்ற இந்தியரை கொழும்புக்கு திருப்பி அனுப்பியது கட்டார்!

கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட இந்திய பிரஜை ஒருவர், கட்டாரிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபரும் மேலும் 69 பேரும் கடந்த 17 ஆம் திகதி, மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர். இவர்களில் 54 பேர் கொழும்பு தறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் பணியாற்றுவதற்காக இணைக்கப்பட்டதுடன், ஏனைய 15 பேர் கட்டாருக்கு அனுப்பப்பட்டனர்.

இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் மேற்படி நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.அங்கு வைத்து அவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார். இந்நிலையில், மீண்டும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சர்வதேச விமான பயணச் சட்டத்துக்கு அமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேற்படி நபரை இந்தியாவின் மும்பை நகருக்கு அனுப்பி வைக்க முடியாத நிலையில், அவருக்கு கொழும்பு ஐ.டீ.எச் இல் சிகிச்சை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!