நாளை சூரிய கிரகணம்! – வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம்.

சூரிய கிரகணத்தை நாளை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் பார்வையிட முடியுமென நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பிலான ஆதர்சி கிளாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

யாழ்.நெடுந்தீவை அண்மித்த பிரதேசங்களில் காலை 10.30 மணியளவில் சூரிய கிரகணம் தென்படும். ஊர்காவற்துறை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறையிலும் இந்த சூரிய கிரகணம் தென்படும்.

கொழும்பில் காலை 10.29இற்கு சூரிய கிரகணம் தென்படும் என்றும் மு.ப. 11.51 மணியளவில் சூரிய கிரணம் முழுமையடைந்து 1.50 மணிக்கு முடிவடையும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து சூரியனை பார்க்கும் போது சூரியன் சந்திரனால் 16.5 வீதம் மறைக்கப்படுவதைக் காணலாம். மேலும் இந்த சூரிய கிரகணத்தை வெற்றுக்கண்களால் பார்க்க வேண்டாம் என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!