கருணாவுக்கு ருவான் எதிர்ப்பு!

ஆனையிறவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொலை செய்தேன் என கருணா எனும் வி.முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்திற்கு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ருவான் விஜயவர்த்தன, தனது ருவிட்டர் பதிவிலேயே கருணாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த ருவிட்டர் பதிவில், ‘கொரோனா வைரசினை விட தான்ஆபத்தானவன். ஆனையிறவில் 2000 முதல் 3000 படையினரையும் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான படைவீரர்களையும் கொலை செய்தேன் என கருணா தெரிவித்துள்ளார்.

அதாவது ராஜபக்ஷ, தேசியவாதமும் தேசப்பற்றும் பேசும் நிலையில், கிழக்கில் அவர்களுடைய நபர் ஆயிரக்கணக்கான படைவீரர்களை கொலை செய்தேன் என தெரிவிக்கின்றார்.’ – என்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!