சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் கஞ்சிபானி இம்ரான் மற்றும் வெலே சுதா…

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கிடையில் கஞ்சிபானி இம்ரான் மற்றும் வெலே சுதா ஆகியோர் அடங்குவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு தலைவர்கள் போன்று ஹெரோயின் வர்த்தர்கள் சிலர் நேற்று (25) காலை தொடக்கம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கஞ்சிபானி இம்ரான், வெலேசுதா மற்றும் மொஹமட் சியாம் உள்ளிட்ட சுமார் 15 சிறைக் கைதிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மெகசின் மற்றும் வெலிகடை சிறைச்சாலை கைதிகளுக்கு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக கைப்பேசி, சிம் அட்டைகள் உள்ளிட்ட தொலைப்பேசி பாகங்களை பல்வேறு முறைகளின் ஊடாக சிறைச்சாலையினுள் அனுப்ப முயற்சித்த 04 சந்தேகநபர்கள் பொரளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களின் வீடுகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது சூட்சமமான முறையில் கைதிகளுக்கு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த உபகரணங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!