ஐசிசி தலைவர் பதவி குறித்து சிந்திக்கவில்லை – சங்கா

விசாரணைகள் முடிவடைந்ததும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமேயின் குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைகளை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயச் சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக ஆஜரான பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார். மேலும்,

ஐ.சி.சி தலைவர் பதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? பதவி கிடைத்தால் ஏற்பீர்களா; என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

“இல்லை, அப்பதவிக்கு அவ்வாறு அழைப்பு விடுக்கப்படுவதில்லை, அதற்கு வேறு விதமான நடைமுறைகள் உள்ளன, எனினும் தற்போது நான் ஐ.சி.சி தலைவர் பதவி குறித்து சிந்திக்கவில்லை.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!