பூநகரி வீதியில் நேற்று மாலையும் ஒருவர் டிப்பர் மோதி மரணம்!

கிளிநொச்சி- பூநகரி, தம்பிராய் பகுதியில் நேற்று மாலை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில், வியாபார நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட முச்சக்கர மோட்டார் சைக்கிள், தீக்கிரையாகியுள்ளது

டிப்பர் வாகனம், மோதியதை அடுத்து, முச்சக்கர மோட்டார் சைக்கிள், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடனும் மோதியதாக கூறப்படுகிறது.இந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார் என்றும் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், பூநகரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, நேற்றுக் காலை பூநகரிப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதிய மற்றொரு விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!