திருமண விழாக்களில் 300 பேருக்கு அனுமதி!

திருமண வைபவங்களில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

திருமண மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையில் 50 சதவீதம் அல்லது ஆகக்கூடியது 300 பேருக்கு (மணமகன் உள்ளிட்ட குழு, மணமகள் உள்ளிட்ட குழு, இசைக்குழு மற்றும் ஏனைய கலைஞர்கள் அடங்கலாக) குறைந்த எண்ணிக்கையானோர், திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்கு ஜுலை 6ஆம் திகதி தொடக்கம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதே போன்று திருமண வைபவத்தில் கலந்து கொள்வவோருக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளியை கடைபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், மண்டபங்களில் கலந்துகொள்வதற்காக இதற்கு முன்னர் வழங்கிய ஆலோசனைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும், அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!