பிரசாரங்களில் சுகாதார விதிமுறைகள் புறக்கணிப்பு!

பெரும்பாலான வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் பதிவிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

“கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை, பெரும்பாலான அரசியல் கட்சிகள் பின்பற்றுவது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. பெரும்பாலான வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள், உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமல் நடத்தப்படுகின்றது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று, முழுமையாக இல்லாதொழிக்கப்படாத நிலையில் இவ்வாறு செயற்படுவது தவறான விடயமாகும்” எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!