மின்சார கட்டணத்துக்கு சலுகை வழங்க இணக்கம்!

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களுக்கு அரசால் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த மாதங்களுக்கான கட்டணமாக பெப்ரவரி மாதத்திற்குரிய மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட உள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் மின்சாரத் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாமென இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை ஏற்கனவே செலுத்தியிருப்பின், அதற்குரிய பணத்தை மீள வழங்கவோ அல்லது எதிர்வரும் மாதங்களுக்குரிய மின்சாரப் பட்டியலில் குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!