ஏனைய வெடிப்பு சம்பவங்களுக்கும் உயிரிழந்த முன்னாள் போராளியே பொறுப்பு?

இயக்கச்சியில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து உயிரிழந்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரே வேறு மூன்று இடங்களில் நடந்த வெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிடடுள்ளது.

இயக்கச்சி வெடிப்புச் சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே இது தெரியவந்துள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வல்லிபுரம், நெல்லியடி மற்றும் அரியாலை ஆகிய இடங்களிலேயே இவர் வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கடந்த 5ஆம் திகதி வெடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்த போதே அந்த குண்டு வெடித்து குறித்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் உயிரிழந்தார் என்றும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!