கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் இருந்து பொதுசுகாதார பரிசோதகர்கள் விலகல்?

இலங்கையின் பொதுசுகாதார பரிசோதகர்கள் கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் இருந்து உடனடியாக விலகியுள்ளனர்.

இன்று மதியம் முதல் பொதுசுகாதார பரிசோதகர்கள் தங்கள் பணிகளில் ஈடுபடுவதை தவிர்த்துவருகின்றனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுசுகாதார பரிசோதகர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விபரங்களை வெளியிடுகின்றனர் என சமீபத்தில் சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தங்களது நடவடிக்கைகள் சுகாதாரஅமைச்சின் செயற்பாடுகளுக்கு பாதகமாக உள்ளதால் சுகாதார அமைச்சு தங்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதால் இன்று மதியம் முதல் கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் இருந்து விலகியுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!