யாழ்.நகரில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று மாலை பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனம் தெரியாத வன்முறை கும்பல் ஒன்றே இவ்வாறு பெற்றோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்த தாக்குதலில் வீட்டில் தரித்து நின்ற காரிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!