சுமணரத்ன தேரரின் குழுவினர் தாக்கியதாக முறைப்பாடு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுமணரத்ன தேரரின் குழுவினர், தன்னை தாக்கியதாக புணாணை மீள்குடியேற்ற கிராமத்தில் வசிக்கும் கே.எம்.எஸ்.சேனாரத்ன (வயது-42) என்பவர் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை தேரரின் குழுவினர் புணாணை விகாரை பகுதிக்கு பிரச்சார நடவடிக்கையின் பொருட்டு வருகை தந்ததாகவும், குறித்த குழுவினர் பிரச்சார நடவடிக்கையில் ஈட்டிருந்த வேளையில் கே.எம்.எஸ்.சேனாரத்ன என்பவர் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவாக செயற்படுவதாக கூறியதன் பிற்பாடு இவர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தாக்கம் காரணமாக தேரரின் குழுவினர் இவரை தாக்கினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு இலக்கான புணாணை மீள்குடியேற்ற கிராமத்தில் வசிக்கும் சேனாரத்ன வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், தனக்கு இவர்களால் ஏதும் உயிர் ஆபத்துக்கள் வருமோ என்ற அச்சம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!