அர்ஜெண்டினாவில் 20 வருடங்களாக நிர்வாணமாக கட்டிப் போட்டு துன்புறுத்தப்பட்ட மகள்: – தந்தையின் வெறிச்செயல்

அர்ஜெண்டினாவில் 20 வருடங்களாக பெண் ஒருவர் நிர்வாணமாக கட்டிப் போட்டு பெரும் துயரங்களை சந்தித்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அர்ஜெண்டினாவில் பொலிசாரை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தங்கள் வீட்டிற்கு அருகில் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டு இருப்பதாக கூறி தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட போது அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் வீட்டினுள் பெண் ஒருவர் நிர்வாணமாக கட்டினுள் கட்டப்பட்டு கிடந்துள்ளார். இதனால் பொலிசார் அவரை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து பொலிசார் கூறுகையில், தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு வந்ததாகவும், அப்போது Marisa Almiron(42) என்ற பெண் ஒருவர் நிர்வாண நிலையில் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டு கிடந்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும் அந்த பெண் இளமையாக இருந்த போது ஆண் நண்பர் வைத்திருந்ததால், பெண்ணின் தந்தை இந்த கொடூர தண்டனை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் 8 வருடங்களில் இறந்த பின்பும் இந்த பெண்ணின் சகோதரர் 12 வருடங்களாக இந்த கொடூர தண்டனையை பின்பற்றி வந்துள்ளார்.

இதனால் அந்த பெண் தற்போது மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உரிய சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்த நபர் கூறுகையில், அந்த பெண் மிகப் பெரும் துயரங்களை சந்தித்துள்ளார், அவ்வப்போது அலறல் சத்தம் கேட்கும் இதன் காரணமாகவே பொலிசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறியுள்ளார். இதற்கு முன்னரும் பொலிசாருக்கு தகவல் கொடுத்திருந்ததாகவும், ஆனால் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அக்கம்பக்கத்தினர் சிலர் கூறியுள்ளனர். இப்போது கூட அந்த பெண்ணின் சகோதரரை பொலிசார் கைது செய்யாமல் விசாரித்தே வருவதாகவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!