புலமைப்பரிசில் பரீட்சையில் விடையளிக்க மேலதிகமாக 15 நிமிடங்கள்!

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் முதலாவது வினாத்தாளுக்கு விடையளிப்பதற்கு 15 நிமிடங்கள் மேலதிகமாக வழங்குவதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரு இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த முதல் வினாத்தாளுக்கு, ஒரு மணி நேரம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இரண்டாம் வினாத்தாளில் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு அளிக்க வேண்டிய பதில்களின் எண்ணிக்கையை 4 இல் இருந்து மூன்றாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!