கார் ஓட்டுனர்களை கொலை செய்து முதலைகளுக்கு உணவாக போட்ட கொடூரன்!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட கொலையாளி, ஐம்பதுக்கும் மேற்பட்ட டாக்ஸி டிரைவர்களை கொன்று, அதை மறைப்பதற்காக முதலைகள் இருக்கும் கால்வாயில் சடலங்களை வீசியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டில் இருந்து 2004-ஆம் ஆண்டு வரை Devender Sharma என்ற நபர் ஏழு டாக்ஸி ஓட்டுனர்களை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 16 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த Devender Sharma, கடந்த ஜனவரி மாதம் குறுகிய பரோல், அதாவது 20 நாள் பரோலில் வெளிவந்தார்.

ஆனால் பரோல் முடிந்து சிறைக்கு திரும்பாமல் Devender Sharma தலைமறைமாகிவிட்டார். இதனால் பொலிசார் அவரை தேடி வந்த நிலையில், கடந்த புதன் கிழமை(ஆறு மாதங்களுக்கு பிறகு) தலைநகரான டெல்லியில் அவரை கைது செய்தனர். பரோலில் இருந்து வெளியில் வந்த அவர் விதவை ஒருவருடன் வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், தான் பரோல் நிபந்தனைகளை மீறியதாகவும், சிறைக்கு திரும்ப விருப்பம் இல்லாததன் காரணமாகவே இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் தனது குற்றவியல் கடந்த காலத்தைப் பற்றி Devender Sharma விரிவாக கூறினார். அதில், பாரம்பரிய இந்திய மருத்த்துவத்தில் பட்டம் பெற்ற இவர், கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் 11 ஆண்டுகள் ராஜஸ்தானில் இருக்கும் மருத்துவமனையில் ஒரு கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். மோசடி ஒன்றில் ஏராளமான பணத்தை இழந்த Devender Sharma, பணத்திற்காக எரிவாயு சிலிண்டர்களை போலியாக விற்கும் திட்டத்தில் ஈடுபடத் துவங்கினார்.

அதுமட்டுமின்றி, சட்ட விரோதமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்றவைகளிலும் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2004-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். சுமார் 125 மாற்று அறுவை சிகிச்சை செய்த அவர், இதன் மூலம் ஒரு அறுவை சிகிச்சைக்கும் 6,680 டொலர் முதல் 9,350. டொலர் வரை சம்பாதித்துள்ளார். அதன் பின், உத்திரப்பிரதேசத்தில், ஒரு கூட்டத்துடன் சேர்ந்து மற்றொரு திட்டத்தை தீட்டியுள்ளார். அதன் படி வாடகை டாக்ஸிகளை புக் செய்வது போன்று புக் செய்து, அதன் பின் அந்த டாக்ஸியை ஏதேனு ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளுக்கு அழைத்து சென்று, அங்கு டாக்ஸியின் டிரைவர்களை கொலை செய்துவிட்டு, பொலிசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அந்த டிரைவர்களின் சடலங்களை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிவிடுவர்.

அதன் பின் அந்த காரின் பாகங்களையோ அல்லது முழுவதுமாகவோ விற்று பணம் சம்பாதித்துள்ளார், ஒரு காரை இப்படி சுமார் 250 டொலர் வரை விற்றுள்ளார், இப்படி சுமார் 50-க்கும் மேற்பட்ட டாக்ஸி ஓட்டுனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக Devender Sharma பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும் அவர் இப்போது சில கொலைகளுக்கு மட்டுமே தண்டனை பெற்று வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!