பதவி விலகினார் தீபிகா!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து கலாநிதி தீபிகா உடகம, விலகியுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடந்த அரசியலமைப்புச் சபைக் கூட்டத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், கலாநிதி தீபிகா உடகம எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வரை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் நீடிக்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்று அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!