தொடங்கியது வாக்களிப்பு!

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது. இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 5 மணி வரையில் இடம்பெறும்.

இதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பேனா ஒன்று எடுத்து வர வேண்டும் எனவும் அவ்வாறு எடுத்து வராதவர்களுக்கு கிருமி தொற்று நீக்கப்பட்ட பேனா வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் 40 அரசியல் கட்சிகள் மற்றும் 352 சுயேட்சை குழுக்கள் சார்ப்பில் 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை பொது தேர்தலில் வாக்களிக்க 1 கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவர்கள் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 12,985 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்வுள்ளனர்.

இம்முறை அதிகளவான வேட்பாளர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கம்பஹா மாவட்டத்தில் 1,785,964 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 1,709,209 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 1,348,787 பேரும், கண்டி மாவட்டத்தில் 1,129,100 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாளை காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஆரம்பமாவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!