82 ஆயிரம் பேர் தேர்தலுக்கு பாதுகாப்பு!

இன்று நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளில் 82 ஆயிரம் பாதுகாப்புப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மரட்ண நேற்று நடத்திய விசேட ஊடகச் சந்திப்பிலேயே இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளில்,மொத்தமாக 82,091 பாதுகாப்பு பிரிவினர் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களில், 61,078 பொலிசாரும், 3,145 விசேட அதிரடிப்படையினரும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், 2,368 புலனாய்வு அதிகாரிகளும் பொதுத் தேர்தல் பாதுகாப்பு பணிகளில், ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!