பேச்சோடு மட்டும் நில்லாமல் செயலிலும் வாக்கிட்டுக் காட்டிய தேசப்பிரிய!

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் தனது வாக்கினை பம்பலப்பிட்டிய லின்சே பாடசாலையில் உள்ள வாக்களிப்பு நிலையத்திலல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:

“வாக்கெடுப்பு நிலையங்கள் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கவே நான் இம்முறை வாக்களிக்க வந்தேன். 2011ம் ஆண்டிற்குப் பிறகு இந்தத் தேர்தலுக்கே வாக்களிக்க வந்துள்ளேன் மேலும் எனக்கு 65 வயது ஆகிறது எனினும் நான் வாக்களிக்க வந்ததன் காரணம் வாக்கெடுப்பு நிலையங்கள் பாதுகாப்பனவை என்பதை நிரூபிக்கத்தான்.

ஆகவே, அனைவரும் அச்சமின்றி தமது வாக்கினை வந்து இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” -என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!