22 வேட்பாளர்கள் கைது!

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 22 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரையில் தேர்தல் தொடர்பான குற்றங்கள் குறித்த முறைப்பாடுகள் வராவிடினும், தேர்தல் சட்ட மீறல்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக இதுவரை 22 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இவர்களிடம் இருந்து 7 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!