14ம் திகதிக்கு முன்னர் தேசிய பட்டியலை கையளிக்குமாறு அறிவிப்பு!

அனைத்து கட்சிகளும் தமது தேசிய பட்டியல் பெயர் விபரங்களை 14ம் திகதிக்கு முன்னதாக கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுஜன பெரமுன தமது தேசிய பட்டியல் விபரத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்த பின்னர் வெளியிட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியினர் தமது தேசிய பட்டியல் விபரத்தை வெளியிட்ட போதிலும் இன்று (08) கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் தமது பட்டியலை இறுதி செய்யவுள்ளனர்.

எங்கள் மக்கள் சக்தி கட்சி ஞானசார தேரரை பெயரிட்டுள்ளது.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி), தமிழ தேசிய மக்கள் முன்னணி (அ.இ.த.கா), தமிழ் தேசிய கூட்டமைப்பு (இ.த.அ.க) மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!