பம்பரக்கலை தோட்டத்தில் பாரிய தீ; 24 வீடுகள் சாம்பலானது!

நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பம்பரக்கலை மத்திய பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன், வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (10) இரவு 10 மணியளவில் இவ்வாறு திடீரென தீ பரவியுள்ளது. இதனையடுத்து, வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அயலவர்கள் விரைந்து தீயை அணைக்க முற்பட்டபோதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

அதனையடுத்து லிந்துலை பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!