கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய குடியரசு தலைவர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறித்த வைரஸ் தொற்றுக்கு பல தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜுயும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளிளயாகியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,“ பரிசோதனை செய்ததில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த வாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்திக் கொள்ளுமாறும்” அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!