கூட்டமைப்புடன் பேச வேண்டிய தேவை இல்லை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம், நிபந்தனை அடிப்படையில் எம்முடன் எவரும் அரசியல் நடத்த முடியாது என்று பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர். கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டி உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க முடியாது. அவர்களுடன் பேச்சு நடத்த வேண்டிய தேவையும் எழவில்லை.

வடக்குக்கு மாகாண சபையை வழங்கினோம். அதனூடாகப் பயன்பெறவில்லை. முதல் தடவையாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அடுத்த முறை நாம் நிச்சயம் கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவோம்.

யாழ். தேவியை ராஜபக்ச அரசே தலைமன்னார் வரை கொண்டு சென்றது. ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சியையே கூட்டமைப்பு ஆதரித்தது. ஐ.தே.க. ஆட்சியைப் பாதுகாத்தது. வரவு – செலவுத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கியது.

எமது ஆட்சியில்தான் யாழ்ப்பாணத்துக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே கூட்டமைப்பு ஊடாக அல்லது வடக்கு, கிழக்கில் எம்மால் தனித்து இயங்கி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!