இலங்கைக்கு நேசக்கரம் நீட்டுகிறது இந்தியா!

கோத்தாபய ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருங்கிச் செயற்படத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தனவிற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவின் ‘அண்மைய நாட்டிற்கு முன்னுரிமை’ கொள்கையின் கீழ் இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்வதற்காக வெளிவிவகார அமைச்சுடன் மிகவும் நெருங்கிச்செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!