பொலிஸ் பேச்சாளர் குறித்து விசாரணை நடத்த பணிப்பு!

சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பயோவை கைது செய்ய விடுக்கப்பட்ட பிடியாணை தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்த கருத்து மற்றும் நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபருக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவி புரிந்தமை தொடர்பில் சம்பயோ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!