கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் அமெரிக்கா: அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு சிக்கி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 லட்சத்தை நெருங்குகிறது.

மீண்டும் 1200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1.76 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!