இன்று முடிவை அறிவிக்கிறார் மணி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, சட்டத்தரணி வீ.மணிவண்ணன், இன்று தமது நிலைப்பாட்டை ஊடகவியலாளர்களிடம் அறிவிக்கவுள்ளார்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து சட்டத்தரணி வீ.மணிவண்ணனை, கட்சியின் மத்திய குழு நீக்கியிருந்தது.

அவரது நீக்கத்துக்கான காரணங்களைக் குறிப்பிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையினால் கடிதம் ஒன்றும் வீ.மணிவண்ணனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. குறித்த கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையிலான கடிதம் ஒன்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்கு வீ. மணிவண்ணன் நேற்று அனுப்பி வைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!