காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்துக்கு முன்னணி ஆதரவு!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதி, வடக்குக் கிழக்கில் இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்த முடிவில் சரணடைந்த மற்று உறவினர்களால் கையளிக்கப்பட்ட பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவை அறிவித்துள்ளது. மேற்படி போராட்டங்களுக்கு அனைத்து பொது அமைப்புக்களையும், பொது மக்களையும் ஆதரவு வழங்குமாறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!