நாய்க்கடியினால் இருவர் பலி!

நாய்க்கடிக்குள்ளான இரண்டு பேர், யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை சங்கரத்தையை சேர்ந்த தவச்செல்வன் தர்சன் என்ற 15 வயதுச் சிறுவனுக்கு, சில வாரங்களுக்கு முன்னர் நாய் கடித்துள்ளது. அது தொடர்பில் சிறுவன் வீட்டில் தெரிவிக்கவோ, தடுப்பூசி போட்டுக் கொள்ளவோ இல்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிறுவனின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.

இதையடுத்து, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அதேவேளை மன்னார் – தாழ்வுப்பாட்டை சேர்ந்த ஜெபநேசன் கொன்சடியா என்ற 39 வயதுடைய பெண்ணுக்கும், அவரது மகனுக்கும் கடந்த 13ம் திகதி நாய் கடித்துள்ளது. மகனுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட போதும், குறித்த பெண் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளவில்லை.

இந்தநிலையில் கடந்த 21ம் திகதி உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண், மன்னார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!