மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகிறது சுதந்திரக் கட்சி!

மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் நுவரெலியா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் இணைந்து சுதந்திரக் கட்சி போட்டியிட்டது.

எனினும் ஆசனப் பங்கீட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டது என்ற கருத்து நிலவுகின்றது. இந்த நிலையிலேயே, மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சுதந்திரக்கட்சியின் வருடாந்த மாநாடு செப்ரெம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!