குற்றச்சாட்டை நிருபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்! – விக்னேஸ்வரனுக்கு அங்கஜன் சவால்.

பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஒருவருக்கேனும் சாராயம் வாங்கிக் கொடுத்ததையோ, ஐயாயிரம் ரூபா பணத்தைக் கொடுத்ததையோ சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால், அரசியலை விட்டுவிட்டு விலகத் தயாராக இருப்பதாக உள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

சி.வி. விக்னேஸ்வரன் சிங்கள ஊடகமொன்றுக்கு அண்மையில் நேர்காணலொன்றை வழங்கியிருந்தார். இதன் போது அங்கஜன் ராமநாதன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளமை குறித்து அந்த ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சி.வி. விக்னேஸ்வரன், சாராயம் மற்றும் பணத்தைக் கொடுத்ததன் மூலமே அது சாத்தியமானதாக கருத்து வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக அங்கஜன் ராமநாதன் கருத்து வெளியிடுகையில், சி.வி. விக்னேஸ்வரன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டு விலகத் தாம் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!