கொழும்பில் கடும் மழை- வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்!

இன்று காலை பெய்த மழையால் கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கொட்டாஞ்சேனை, இங்குருகொடை சந்தி, காமினி ரவுண்டானா, தேவி பாலிகா வித்யாலய , தும்முல்ல சந்தி, ஹேவ்லாக் வீதி மற்றும் பண்டாரநாயக்க மாவத்தை, ஆமர்வீதி மற்றும் பாபர் வீதி ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

கடும் மழையின் போது வாகனம் ஓட்டும்போது வாகன ஓட்டிகள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!