வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா!

குவைத் நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26ம் திகதி நாடு திரும்பிய 100 பேர் வவுனியா பெரியகாடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பவர்களிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தது. பரிசோதனை முடிவுகளின்படி இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரையும் வெலிகந்தை கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 157 பேர் இன்றைய தினம் கொரோனா‌ தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!