மரண தண்டனை கைதிகள் வாரம் ஒருமுறை வீடு செல்ல அனுமதியுங்கள் – ஹரின்

பிரேமலால் ஜயசேகரவுக்கு மாத்திரம் ஏன் சலுகை வழங்கப்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (08) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“பிரேமலால் ஜயசேகரவுடன், எமக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எமக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம்.

அரசியலமைப்பிலேயே குற்றவாளியொருவருக்கு நாடாளுமன்றம் செல்ல அனுமதியில்லாத நிலையில், இவருக்கு மட்டும் எவ்வாறு இந்த சலுகை வழங்கப்பட்டது.

அப்படியென்றால், மரண தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளுக்கு வாரம் தோறும் அவர்களின் வீடுகளுக்கு செல்லவும் அனுமதி வழங்க வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!