மைத்திரியின் மகனுக்கு தன் கடமையை செய்யுமா இலங்கை சட்டம்? சட்டத்தை மீறி செயற்பட்ட மைத்திரியின் மகனால் சர்ச்சை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன மற்றும் அவரது நண்பர்களினால் தேசிய வனவிலங்கு பூங்காக்கள் தொடர்பான சட்டங்களை மீறி புகைப்படங்கள் சிலவற்றை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

தஹாம் சிறிசேன தனது நண்பர்களுடன் கவுடுல்ல தேசிய வனவிலங்கு பூங்காவிற்கு தனது வாகனத்தில் சென்றுள்ளார். வாகனத்தில் இருந்து இறங்கி அங்கு சில புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார்.

தேசிய வனவிலங்கு பூங்காவினுள் பாதுகாப்பு காரணத்திற்கமைய தாங்கள் பயணிக்கும் வாகனங்களில் இருந்து இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கடுமையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் ஊடாக தஹாம் மற்றும் அவரது நண்பர்கள் குறித்த சட்டத்திட்டங்களை பின்பற்றவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!